கிடைக்கும் விமானத்தில் ஏறி உடனே நாடு வந்து சேருங்கள்! குடிமக்களை வலியுறுத்தும் பிரபல நாடு
கிடைக்கக்கூடிய விமானத்தில் ஏறி உடனடியாக நாடு வந்து சேருமாறு இந்தியாவில் இருக்கும் தனது குடிமக்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அதிகரித்துவரும் கோவிட்-19 தொற்று காரணமாக இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தனது குடிமக்களை வலியுறுத்திய அமெரிக்கா, தற்போது இந்தியாவில் உள்ள தனது குடிமக்களை, கிடைக்கக்கூடிய விமானங்கள் மூலம் உடனடியாக வீடு திரும்ப டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வாரந்தோறும் ஏராளமான நேரடி விமானங்களை இயக்கி வருகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் சுகாதார எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், பாரிஸ், பிராங்பேர்ட் மற்றும் தோஹா வழியாக ஏர் பிரான்ஸ், லுஃப்தான்சா மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய விமானங்களில் கூடுதல் விமான உள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்க குடிமக்கள் விமான நிறுவனங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று சுகாதார எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு (2 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) பயணம் செய்யும் எவரும் பயணத்திற்கு 3 நாட்களுக்குள் ஒரு கோவிட் -19 சோதனையை மேற்கொள்வது கட்டாயமாகும், மேலும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான நிறுவனத்திற்கு தான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற எதிர்மறையான முடிவைக் காண்பிக்கப்பட வேண்டும்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்த்து மீட்கப்பட்டதற்கான ஆவணங்களைக் காட்ட பயணிகள் தயாராக இருக்க வேண்டும்.
அமெரிக்காவை அடைந்ததும், அங்கு பயன்பாட்டில் உள்ள பயணத்திற்கு பிந்தைய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.