மிக அதிக அளவில் கொரோனா தொற்று... ஜேர்மனிக்கு செல்லவேண்டாம்: தன் குடிமக்களை எச்சரித்துள்ள நாடு
தனது இணையபக்கத்தில், கொரோனா காரணமாக ஜேர்மனிக்குச் செல்லவேண்டாம் என்று எழுதியுள்ளது அமெரிக்க மாகாணத்துறை.
நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் ஜேர்மனிக்கு நான்காவது மட்ட பயண எச்சரிக்கை விடுத்துள்ளது, அதன் பொருள் என்னவென்றால், ஜேர்மனியில் கொரோனா மிக அதிக அளவில் உள்ளது என்பதாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஜேர்மன் வாழிட உரிமம் வைத்திராத அமெரிக்கர்கள் அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து வேறு காரணங்களுக்காக ஜேர்மனிக்கு வருவதற்கு ஜேர்மனியும் தடைவிதித்துள்ளது.
அப்படியும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள் ஜேர்மனிக்குள் வந்ததும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதுடன், கொரோனா பரிசோதனைகளுக்கும் உட்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Germany Travel Advisory: Level 4 - Do not travel to Germany due to COVID-19. Exercise increased caution in Germany due to terrorism. https://t.co/imceZQdEA5 pic.twitter.com/bFAfZihJST
— Travel - State Dept (@TravelGov) April 21, 2021