மருத்துவமனையில் கணவனை சுட்டுக் கொன்ற மனைவி: இறுதியில் தெரியவந்த பகீர் உண்மை!
அமெரிக்காவில் மருத்துவமனையில் தீராத நோயால் அவதிப்பட்டு வந்த கணவனை மனைவியே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனை கொன்ற மனைவி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் தீராத நோயினால் போராடி வந்த கணவனை(77) அவரது மனைவி (76) துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்ற மருத்துவமனைக்கு வந்த பொலிஸார் அங்கிருந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.
பின் பொலிஸார் நடத்திய விசாரணையில், நோய்வாய்பட்ட முதியவர் நீண்ட நாட்களாக வேதனையில் போராடி வந்த நிலையில் மருத்துவமனையில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயற்சித்தது தெரியவந்தது.
ஆனால் அது முடியாமல் போனதால், கணவனை மனைவியே சுட்டுக் கொலை செய்துள்ளார். பிறகு தன்னை தானே சுட்டுக் கொள்ளவும் மனைவி திட்டமிட்டுள்ளார்.
Press release regarding the Advent Health incident. pic.twitter.com/QHoFqgGhGq
— Daytona Beach Police (@DaytonaBchPD) January 21, 2023
இது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்பே கணவனும் மனைவியும் உரையாடல் நடத்தி இருந்ததும் தற்போது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கணவனை சுட்டுக் கொன்ற மூதாட்டியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.