அமெரிக்காவில் அதிகாலை ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு: பொலிஸார் விசாரணை
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் கேட்டரிங் ஹாலுக்கு வெளியே ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் வரை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நியூயார்க் மாகாணத்தின் ஓசோன் பூங்காவில் உள்ள கிராஸ் பே பவுல்வார்டு மற்றும் டெசார்க் சாலையில் உள்ள வணிகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட தகராறின் போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 38 வயதுடைய நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் ஜமைக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 32 வயதுடைய நபர் ஒருவர் முகத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அதே மருத்துவமனைக்கு தனிப்பட்ட முறையில் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் உயிர் பிழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் 28 வயதுடைய மற்றொரு நபர் ஒருவர் கிங்ஸ் கவுண்டி மருத்துவமனைக்கு காலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலையாக இருக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: புடின் சிலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பரபரப்பு
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.