கொரோனாவால் இறந்தவர்களின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கும் அமெரிக்கா! எதற்காக தெரியுமா?
அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா உள்ளது. கடந்த ஆண்டு, அமெரிக்காவில் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக தலைநகரான நியூயார்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இறந்தவர்களின் உடல்கள் அவசர, அவசரமாக புதைக்கப்படாமல், குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்திட அரசு முடிவு செய்தது. நிலைமை சீரான பிறகு இறந்தவர்களின் குடும்பத்தினர் விருப்பத்துடன் அவர்களது உடல்கள் அடக்க செய்யப்படும் என்றும் நியூயார்க் நகர நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நியூயார்க் நகர சிட்டி பொலிசார் கூறுகையில், கடந்த ஆண்டு, கொரோனாவால் பலியான சுமார் 750 உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் விரைவில் இந்த எண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி வருகிறோம். இறந்தவர்களின் உடல்கள் ஹார்ட் தீவுப் பகுதியில் புதைக்கப்பட குடும்பத்தினர் விரும்பினால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த வருடம் கொரோனா அதிவேகமாக பரவியது. இதன் விளைவாக ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.
4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
இந்த நிலையில் ஜோ பைடன் பதவியேற்றது முதலே அங்கு தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்தது குறிப்பிடத்தக்கது.