ஜோ பைடனின் முதல் ஆசிய பயணம்.. அணுஆயுத சோதனை நடத்தும் வடகொரியா? வெளியான தகவல்
ஜோ பைடனின் ஆசிய வருகைக்கு முன், ஐநாவின் தடையை மீறி வடகொரியா அணுஆயுத சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக அமேரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக ஆசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அவர் தென்கொரியா மற்றும் ஜப்பான் நடத்தும் தொடர் உச்சி மாநாடுகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார். பைடனின் ஆசிய வருகைக்கு முன், அவரை கோபத்திற்கு ஆளாக்க அணு ஆயுத சோதனை அல்லது அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்த வாய்ப்புள்ளது என அமெக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், 'பிராந்தியத்தில் உள்ள எங்களது நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் தடுப்பை உறுதி செய்வதற்காக, அமெரிக்கா தனது இராணுவ நிலைப்பாட்டில் குறுகிய மற்றும் நீண்ட கால மாற்றங்களைச் செய்ய தயாராக உள்ளது' என தெரிவித்துள்ளார்.