அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய குண்டு வெடிப்பு ; அதிர்ச்சியில் பொதுமக்கள்
அமெரிக்காவில் சந்தேக நபரை கைது செய்ய சென்ற வீட்டில் குண்டு வெடித்து அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பாரிய குண்டு வெடிப்பு
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் பகுதியில் உள்ள ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சுடும் கேட்டுள்ளது.
இந்த சத்தத்தை அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த வீட்டிற்குள் இருந்த சந்தேக நபர் பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து அந்த வீட்டில் குண்டு வெடித்துள்ளது.
Video of the explosion. Hope everyone was out of the house#Arlington #ballston @ARLnowDOTcom @RealTimeNews10 pic.twitter.com/JSZE7LkoTD
— c “” maj (@connormaj) December 5, 2023
பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ கிளம்பியுள்ளது. இந்த சத்தத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர்.
குண்டு வெடித்ததில் அந்த வீடானது முற்றிலும் இடித்து விழுந்துள்ளது. சம்பவம் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வீட்டிக்குள் இருந்த சந்தேக நபர் தப்பி ஓடினாரா அல்லது உயிரிழந்தாரா என்று தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த சந்தேக நபர் வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து பொலிஸார் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |