சானிட்டரி நாப்கினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க வேண்டுமா? பெண்கள் கட்டாயம் இதை படிங்க.
பொதுவாக மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் சானிட்டரி பேட்கள் மிகவும் பாதுகாப்பானவை. ஆனால் சானிட்டரி பேட்கள் மூலம் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
ஏனெனில் அவை டையாக்ஸின் மற்றும் சூப்பர்-அப்சார்பெண்ட் பாலிமர்கள் போன்ற உறிஞ்சும் மூலக்கூறுகளை பயன்படுத்துகின்றன.
இதன் காரணமாக இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கக்கூடிய டையாக்ஸின் உடலில் குவிந்து, கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் தெரிவிக்கப்டுகின்றது.
எனவே இவற்றில் இருந்து ஆரம்பத்திலிருந்து தடுக்க வேண்டுமாயின் ஒரு சில முன்னேச்சரிக்கைகளை தெரிந்து வைத்து கொள்வது அவசியமானது ஆகும். தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
- சானிட்டரி பேட்களை அடிக்கடி மாற்ற வேண்டும். 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒவ்வொரு முறையும் மாற்றுவது அவசியம்.
- சிறுநீர் குழாய் தொற்றுக்கான (UTI) வாய்ப்புகளை குறைக்க பீரியட் சமயங்களில் நீரேற்றமாக இருங்கள். அதிகஅளவில் தண்ணீர் அருந்துங்கள்.
- எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த உள்ளாடைகளை அணிந்து பெரினியல் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
- சுத்தமான ஆர்கானிக் பேட்களை தேர்வு செய்வது நல்லது.
- நறுமணம் வீசும் பேட்களை தேர்வு செய்ய வேண்டாம்.
- பொது வாஷ்ரூம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட்கள் சரியாக சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- உங்கள் யோனி அதாவது பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி ஏதேனும் தடிப்புகள் அல்லது அரிப்புகள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.