இந்தியா எப்படி அந்த போட்டிய ஜெயிச்சது? இன்னமும் என்னால நம்ப முடியல! புலம்பி தள்ளும் அவுஸ்திரேலியா வீரர்
அவுஸ்திரேலியா அணி வீரரான உஸ்மான் கவாஜா, இந்திய அணி காபாவில் தங்களை வீழ்த்தியது பற்றி பேசியுள்ளார்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, கடந்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. அதன் படி நான்காவது போட்டி, அவுஸ்திரேலியாவின் கோட்டை என்றழைக்கப்படும் காபாவில் நடைபெற்றது.
ஆனால், இப்போட்டியில் இந்திய அணி அசால்ட்டாக இலக்கை எட்டிப் பிடித்து வரலாற்று சாதனை படைத்ததுடன், தொடரையும் கைப்பற்றியது. இது குறித்து தற்போது பேசியுள்ள அவுஸ்திரேலியா வீரர் உஸ்மன் கவாஜா, இப்போது வரை கூட என்னால் அந்த காபா போட்டியை மறக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஏனெனில், நான்காவது, இன்னிங்சில் எப்பொழுதும் காபா மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றது போல் இருக்கும். அந்த போட்டியில் எப்படியும் இந்தியா தோற்று விடும் என்று அனைவரும் நினைத்தோம்.
ஆனால் அவற்றை எல்லாம் தவிடுபொடியாகும் படி இறுதிவரை நிதானமாக நின்று இந்திய அணி வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், நாதன் லியோன் என அனைவரது பந்து வீச்சையும் பதம் பார்த்தனர். அவுஸ்திரேலியாவை மனதளவில் இந்திய அணி வீழ்த்தியது என்று தான் கூறவேண்டும்.
இறுதியாக இந்தியா எப்படி அந்த போட்டியில் வெற்றி பெற்றது என்று இன்னும் தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.