இந்தியர்கள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுங்கள்: இந்திய தூதரகம் அறிவிப்பு!
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி உக்ரைனின் கிளிவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கிடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது தூதரகத்தை கிளிவ் இருந்து மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரத்திற்கு மாற்றியது.
இந்த நிலையில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியா தனது நாட்டு மக்களை தற்காலிகமாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Embassy of India in Kyiv asks Indians, particularly students whose stay is not essential, to leave Ukraine temporarily in view of uncertainties of the current situation pic.twitter.com/U15EoGu89g
— ANI (@ANI) February 15, 2022
உக்ரைனில் நிலவும் நிலையற்ற பதற்றமான சூழ்நிலையால், உக்ரைனில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணிகளுக்காக உக்ரைன் உள்ள இந்தியர்கள் தற்காலிகமாக வெறியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் உக்ரைனிற்கு இந்தியர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், உக்ரைன் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பை உடனுக்குடன் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.