அவனுக்கு மரண தண்டனை கொடுக்கனும்! இது பத்தாது... நாகப்பாம்பை ஏவி மனைவியை கொன்ற வழக்கில் மாமியார் ஆவேசம்
கேரளாவில் மனைவியை விஷப்பாம்பை வைத்து கொலை செய்த வழக்கில் கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அது தனக்கு திருப்தி அளிக்கவில்லை என பெண்ணின் தாயார் வேதனையுடன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). இவர் கடந்தாண்டு மே 6ஆம் திகதி வீட்டு கட்டிலில் படுத்திருந்த போது விஷப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.
இது குறித்த விசாரணையில், சூரஜ் தான் மனைவியை நல்லப்பாம்பை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் உத்ராவை கொன்றுவிட்டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பாம்பை வாடகைக்கு வாங்கி கடிக்க வைத்தது தெரிந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சூரஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி 17 ஆண்டுகள் சிறை, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய சூரஜ், எல்லாவற்றையும் புரிந்து கொள்ள உத்ராவின் தந்தையின் அறிக்கையை நீங்கள் படிக்க வேண்டும். என் மனைவி உத்ரா மற்றும் குழந்தை குறித்து சொல்லப்பட்ட அனைத்தும் கதை தான் உண்மையில்லை என கூறினார், மேலும் சூரஜ் பேச முயன்ற போது அவரை பொலிசார் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இதனிடையில் சூரஜுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அவரின் மாமியாரும், உத்ராவின் தாயருமான மணிமேகலை கூறுகையில், என் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை, இந்த தண்டனை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை, நான் மரண தண்டனையை தான் எதிர்பார்த்தேன்.
இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.