ரகசியமாக கொத்து கொத்தாக காட்டுப்பகுதியில் எரிக்கப்படும் சடலங்கள்! வெளியான அதிர வைக்கும் புகைப்படம்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இறந்தவர்கள் உடல்கள் ரகசியமாக காட்டுப்பகுதியில் கொத்து கொத்தாக எரிக்கப்படும் அதிர வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் 2வது இந்தியாவை மிக பயங்கரமாக உலுக்கி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற ஒவ்வொரு மாநில அரசும் கடுமையாக போராடி வருகின்றன.
பல மாநில அரசுகள் கொரோனா பாதிப்புகளை மறைத்து பொய்யான புள்ளிவிவரங்களை வெளியிடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதேசமயம் பல மாநிலங்களில் இறந்வர்களின் உடல்கள் தகனம் செய்ய மயான பூமிக்கு வெளியே வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் படங்கள் வெளியாகி அதிர வைத்தன.
இந்நிலையில், பாஜக-வின் தீரத் சிங் ராவத் தலைமையிலான ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுப்பகுதியில் உடல்கள் கொத்து கொத்தாக தகனம் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
குறித்த புகைப்படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள almora பகுதியில் எடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Pictures of mass cremations in Almora, Uttarakhand. Govt secretly cremating dead bodies in forest area. pic.twitter.com/pmQOR6OlrX
— Aarif Shah (@aarifshaah) May 15, 2021
தகனம் செய்யப்படும் உடல்கள் கொரோனாவால் இறந்தவர்களுடையது என தெரிகிறது.
புகைப்படத்தில், கட்டுப்பகுதியில் பிபிஇ கிட் அணிந்த பலர் உடல்களை வரிசையாக அடுக்கி எரியூட்டுவதை காட்டுகிறது.