திடீர் வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்! உயரும் பலி எண்ணிக்கை..அதிர்ச்சி வீடியோ
இந்திய மாநிலம் உத்தரகாண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 4 பேர் பலியாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேக வெடிப்பு
உத்தரகாண்டின் உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள உயரமான கிராமங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது.
VIDEO | Uttarakhand: Cloudburst in Kheer Ganga triggers devastation. Several feared swept away. More details awaited.
— Press Trust of India (@PTI_News) August 5, 2025
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/tKFQJX8Udq
இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளைப்பெருக்கில் பல கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பலர் மண்ணில் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பில் வெளியான முதற்கட்ட தகவலின்படி 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழப்பு அதிகரிக்கலாம்
ஆனால் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். எனவே உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், மலை அடிவாரத்தில் தாராலி கிராமமே முழுவதுமாகவே மண்ணில் புதையுண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அவசர செயல்பாட்டு மையம், இரவு முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ருத்ரபிரயாகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து விழுந்த இடிபாடுகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |