தடுப்பூசி போட்ட பிறகு அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்கும்! ONS ஆய்வில் தெரியவந்த உண்மை
தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா தொற்று உறுதியாகும் நபர்கள் அறிகுறிகளைக் காண்பிப்பது குறைவு என்றும் அவர்களுடைய உடலில் வைரஸ் குறைவாக இருப்பதாகவும் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பை குறைக்குமே தவிர முழுமையாக வைரஸிடமிருந்து பாதுகாப்பு அளிக்காது என ONS குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வு குத்துமதிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.
தடுப்பூசி போட்ட பிறகு முதல் மூன்று வாரங்களில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகமாக இருப்பதாகவும், இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு குறைவதாகவும் ஆய்வு காட்டுகிறது.
தடுப்பூசி போட்ட பிறகு நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் 40% க்கும் குறைவானவர்கள் அறிகுறிகளைக் காட்டினர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.