இங்கிலாந்து மக்களுக்கு.., முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பிரித்தானிய அரசு
இங்கிலாந்தில் அடுத்த கட்டமாக 44 வயதில் இருக்கும் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்படுவதாக பிரித்தானிய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடான இங்கிலாந்தில், சமீபத்தில் 45 முதல் 49 வயதுக்கு உட்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக 44 வயதில் உள்ள மக்கள் மட்டும் தங்களுக்காக முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கான ஓன்லைன் முன்பதிவு திங்கட்கிழமை முதல் தொடங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 44 வயதில் இருப்பவர்கள் மற்றும் வரும் ஜூலை 1-ஆம் திகதி 44 வயதை எட்டவுள்ள அனைவரும் தங்களுக்கான தடுப்பூசியை புக் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
அவர்களைத் தொடர்ந்து 40 முதல் 43 வயத்துக்கு உட்பட்ட மக்களுக்கு எப்போது தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சிலநாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூலை இறுதிக்குள் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குறைந்தது முதல் டோஸை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது 33.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 12.6 மில்லியன்கள் முழுமையாக இரண்டு தடுப்பூசிகள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.