முறையற்ற உறவால் 31 வயது விதவை பெண்ணுக்கு நேர்ந்த கதி! அழுகிய நிலையில் கிடந்த துயரம்
தமிழகத்தில், சாக்கு மூட்டையில் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில், அவர் யார், இது எப்படி நடந்தது என்பது குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, இறந்து கிடந்த பெண் வாடிப்பட்டி அருகே உள்ள சி. புதூரை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் தமிழ் செல்வி(31) என்பதும் தெரியவந்தது.
இவரின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து போக, தமிழ் செல்வி வீட்டு கடனிற்காக 80 ஆயிரம் ரூபாய் வாடிப்பட்டியை சேர்ந்த மைக்செட் ஆபரேட்டராக பணிபுரியும் லட்சுமணன் என்பவரிடம் கடனாக வாங்கியுள்ளார்.
இவர்களுக்குள் இருந்த பழக்கம் நாளடைவில் அது நெருங்கி பழகும், முறையற்ற உறவாக மாறியது. அதன் பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், லட்சுமணன் தான் கொடுத்த பணத்தை, அவரிடம் கேட்டு வந்துள்ளார்.
ஆனால், தமிழ் செல்வி தொடர்ந்து நாட்களை கடத்தி வந்ததால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த லட்சுமணன், அவரை தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் வீசிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக லட்சுமணனை கைது செய்த வாடிப்பட்டி பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.