வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை அரைசதம் - ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியுள்ளது.
ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

இன்று ஹராரேவில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் குவித்தது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக வெஸ்லி மாதவேரே 39 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் மயங்க் யாதவ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷி சாதனை
19 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்கள் குவித்து தனது சர்வதேச முதல் அரைசத்தை வைபவ் சூரியவன்ஷி பதிவு செய்தார்.

15 வயதான சூர்யவன்ஷி, சர்வதேசப் போட்டிகளில் அரைசதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் நேபாள வீரர் குஷால் மல்லா அமெரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 15 வயது மற்றும் 340 நாட்களில் அரைசதம் அடித்திருந்தார்.
சூர்யவன்ஷி 15 வயது மற்றும் 118 நாட்களில் சர்வதேச அரைசதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |