நான் அதற்கு மட்டுமே முயற்சிக்கிறேன்: சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
சில மைதானங்களில் ஓட்டங்கள் குவிப்பது மிகவும் பிடிக்கும் என வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
வைபவ் சூர்யவன்ஷி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்தார்.

மொத்தம் 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் 50 ஓட்டங்கள் விளாசி, தனது முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
இங்கிலாந்து தொடரில் விரைவாக ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி, மைதானம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
அவர், "எனக்கு இங்குள்ள சூழல் மிகவும் பிடித்திருக்கிறது. சில மைதானங்களில் ஓட்டங்கள் குவிப்பது இயல்பாகவே மிகவும் பிடிக்கும்; ஒருவேளை இதுவும் அப்படியான ஒரு இடமாக இருக்கலாம்.
ஆனாலும், இதை நான் சாதாரணமாகவோ அல்லது உறுதியானதாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. நான் விளையாடும் இடமெல்லாம் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும், அணிக்கு பங்களிக்கவும் மட்டுமே முயற்சிக்கிறேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |