மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அண்ணாநகர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு தொற்று உறுதியானது.
தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும் வீட்டில் இருந்தபடியே அவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்திரைகளை உட்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.