வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி.., ஈரான் போர் குறித்து வைரமுத்து விமர்சனம்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.
வைரமுத்து கூறியது
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது. இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
அந்தவகையில், கடந்த 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகின் தலையில் மெல்லிய இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது அணுகுண்டு "
வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்" கலங்குகிறது உலகு. ஈரானின் அணுசக்தித் தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள்வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா. வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி.
தான் கட்டமைத்த நாகரிகத்தைத் தானே அழிப்பதன்றி இதுவரை போர்கள் என்ன செய்தன?
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் அணுகுண்டு முட்டையிடும் அலுமினியப் பறவைகள் அதனதன் கூடுகளுக்குத் திரும்பட்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |