உங்களை போலவே நானும் கலங்குகிறேன்! ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கம்
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாய் மரணம்
தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரின் தாயார் மறைவுக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
வைரமுத்து இரங்கல்
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 'உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன் மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே ஒரு முதலமைச்சரைப் பெற்றுக் கொடுத்தோம் என்ற பெருமாட்டியின் பெருமை மறைவதில்லை என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே எல்லாத் துன்பங்களில் இருந்தும் காலம் உங்களை மீட்டெடுப்பதாகுக' என தெரிவித்துள்ளார்.
உங்களைப் போலவே
— வைரமுத்து (@Vairamuthu) February 25, 2023
நானும் கலங்குகிறேன்
மூத்து முதிர்ந்து
உதிர்ந்தாலும்
தாய் தாய்தானே
ஒரு முதலமைச்சரைப்
பெற்றுக்கொடுத்தோம் என்ற
பெருமாட்டியின் பெருமை
மறைவதில்லை
என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே
எல்லாத்
துன்பங்களிலிருந்தும்
காலம் உங்களை
மீட்டெடுப்பதாகுக