வந்தே பாரத் ரயிலை ஓட்டும் லோகோ பைலட்டின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில் சேவைகள் நாடு முழுவதும் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது காச்சிகுடா–யஸ்வந்த்பூர், விஜயவாடா–எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல், செகந்திராபாத்–நாக்பூர், விசாகப்பட்டினம்–புவனேஸ்வர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 2026 விஜயதசமிக்குள் விஜயவாடாவில் இருந்து முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலுக்கு அனுபவம் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற லோகோ பைலட்டுகள் நியமிக்கப்படுகிறார்கள்.

லோகோ பைலட்டாக பணியில் சேர முதலில் RRB நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று Assistant Loco Pilot (ALP) ஆக வேண்டும்.
இதற்கு 10அம வகுப்பு தேர்ச்சி, தொடர்புடைய ITI சான்றிதழ் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அவசியம்.
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், ரயில்வே நிர்ணயித்த மருத்துவ மற்றும் கண்பார்வைத் தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
Assistant Loco Pilotகளின் அடிப்படை ஊதியம் ரூ.19,900. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளுடன் மாதம் சுமார் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் கிடைக்கும்.

அனுபவம், பதவி உயர்வு மற்றும் சிறப்புப் பயிற்சிக்குப் பிறகே வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களை இயக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
வந்தே பாரத் ரயிலை இயக்கும் அனுபவம் வாய்ந்த லோகோ பைலட்டுகள் மாதம் ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக சம்பளம் பெறலாம்.
இதனுடன் Running Allowance, Night Duty Allowance, மருத்துவ வசதி, ஓய்வூதியம், ரயில் பயணச் சலுகை, ஊதியத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலன்களும் வழங்கப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |