நான் அப்படிபட்டவள் தான்! மகளுடன் வனிதா வெளியிட்ட பதிலடி- என்ன சொல்லியிருக்கிறார்?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ள வனிதா விஜயகுமார், மகளுடன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட்டில் சீசன் 1லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி,
சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்தி மற்றும்
இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபினய் ஆகியோர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.
இதுவரையிலும் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா, ஷாரிக் மற்றும் அபினய் வெளியேறியுள்ள நிலையில், போட்டியிலிருந்து தானாக வெளியேறினார் வனிதா விஜயகுமார்.
இதற்கு காரணம், கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என தெரிந்தவுடன் ரம்யா கிருஷ்ணன் வரலாம் என்ற எண்ணத்தில் வனிதா கிளம்பிவிட்டதாக கூறப்பட்டது.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமான இன்ஸ்டாகிராமில் மகளுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ள வனிதா, நான் திமிர் பிடித்தவள் என்று கூறுபவர்களுக்காக என தொடங்கி, ஆம் நான் திமிர் பிடித்தவள் தான்.
நான் அதற்கு தகுதியானவள் தான், அதை கையாளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள், அது என் பிரச்சனை அல்ல, உங்களுடைய பிரச்சனை. நான் தான் எனக்கு முக்கியத்துவம் அல்லது முன்னுரிமை கொடுக்க முடியும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.