இளவரசர் பிலிப்பை தெய்வமாக மதிக்கும் பழங்குடியினர்! முறைப்படி துக்க அனுசரிப்பு நடத்தி மரியாதை
இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கு பிரித்தானியா முழுவதும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், அங்கிருந்து அரை உலக தொலைவில் உள்ள ஒரு பசிபிக் தீவில் வாழும் ஒரு பழங்குடி சமூகத்தினர் துக்கம் அனுசரித்துவருகின்றனர்.
பல தசாப்தங்களாக, Tanna-வின் Vanuatuan தீவில் உள்ள இரண்டு பழங்குடி கிராமங்கள் இளவரசர் பிலிப்பை கடவுள் போன்ற ஆன்மீக உருவமாக மதிக்கின்றன.
அவர் "மிகவும் சக்திவாய்ந்த ஆத்மா என்றும் கடவுளின் மறுசுழற்சி செய்யப்பட்ட வம்சாவளியாகவும்" கருதப்படுவதாக, பழங்குடியினரை 1970-களிலிருந்து ஆய்வு செய்துவரும் மானுடவியலாளர் Kirk Huffman கூறுகிறார்.
இந்நிலையில், பிலிப்பின் மரணத்துக்கு முறையான துக்க அனுசரிப்பை பழங்குடியினர் நடத்திவருகின்றனர். திங்களன்று, இளவரசர் பிலிப்பை நினைவுகூரும் விழாவில் ஏராளமான பழங்குடியினர் நூறு பேர் மாபெரும் ஆலமரங்களின் கீழ் கூடியிருந்தனர்.
மேலும், அவர்கள் அடுத்த சில வாரங்களுக்கு அவ்வப்போது இளவரசர் பிலிப்பிற்கான சடங்குகளைச் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அவர்களின் சடங்குளில் நடனம் ஆடுவார்கள், ஊர்வலம் நடத்துவார்கள், இளவரசர் பிலிப்பின் நினைவு படங்களை காண்பிப்பார்கள், அதே சமயம் ஆண்கள் Kava தாவரத்தின் வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் சடங்கு பானமான Kava-வைக் குடிப்பார்கள்.
மேலும், சடங்கு நிகழ்வுக்கு ஏராளமான பன்றிகள் கொல்லப்படும் என்று கூறப்படுகிறது.
இளவரசர் பிலிப்பின் மரணம் குறித்து பேசிய பழங்குடினரின் தலைவர் Yapa "Tanna தீவில் உள்ள மக்களுக்கும் ஆங்கில மக்களுக்கும் உள்ள தொடர்பு மிகவும் வலுவானது. நாங்கள் ராயல் குடும்பத்துக்கும் இங்கிலாந்து மக்களுக்கும் இரங்கல் செய்திகளை அனுப்புகிறோம்" என்று கூறியுள்ளார்.