பொலிஸில் புகார் அளித்தால் கொலை செய்துவிடுவேன்! இலங்கை தமிழ்ப்பெண்ணை மிரட்டிய அரசு அதிகாரி கைது
இலங்கை தமிழர்கள் முகாம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற அரசு அதிகாரி.
வி.ஏ.ஓவை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார்.
தமிழகத்தில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தின் இரும்பூதிப்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒன்றியத்தில் அன்புராஜ் (36) என்பவர் வி.ஏ.ஓ வாக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த செப்டம்பர் 29 - ஆம் திகதி மதியம் முகாமில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த திருமணமான 35 வயது பெண்ணிடம், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியான அந்த பெண், அவரை தடுத்திருக்கிறார். பின்னர் அப்பெண் கூச்சலிட்ட நிலையில் அன்புராஜ் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்நிலையில் மறுநாள் இரும்பூதிப்பட்டி சென்ற அன்புராஜ், அங்கு கடைக்கு வந்த அதே பெண்ணிடம் இதுதொடா்பாக பொலிசில் புகாா் செய்யக்கூடாது எனக் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அன்புராஜை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.