உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் ! அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா?
உலக சுகாதார அமைப்பு (WHO) SARS-CoV-2 இன் புதிய வகையை சமீபத்தில் வகைப்படுத்தியது. இந்த புதிய வைரஸ் மாறுபாடு B.1.1.529 ஆனது உலக சுகாதார அமைப்பால் Omicron என பெயரிடப்பட்டுள்ளது, இது கவலைக்குரிய மாறுபாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, புதிய வகை ஒமிக்ரோன் (Omicron) கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்ற கேள்வி தற்போது பலரிடையே காணப்படுகின்றது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுவதாவது,
புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடுமா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
அதேபோல், வேகமாகப்பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரஸ் உடன் ஒப்பிடும் போது இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் இல்லை.
ஒமிக்ரான் வகை வைரசுக்கான அறிகுறிகள் பிற வைரசுகளின் அறிகுறிகளுடன் மாற்றுபட்டவை என்பதை உறுதி செய்ய எந்த வித தகவல்களும் இல்லை என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.