இந்திய முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து! உயிர் தப்பிய ஒரே நபர் இவர் தான்: வெளியான விபரம்
தமிழகத்தில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பிய ஒருவரின் விபரம் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இன்று, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதனால் இந்த ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி மிதுலிஹா என 13 பேர் உயிரிழந்தனர்.
இருப்பினும் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, தற்போது மீட்கப்பட்ட அந்த நபர் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
அவர், விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை இயக்கிய விமானப்படை கேப்டன் எனவும், அவர் பெயர் வருண்சிங் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள இவர், வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது சௌர்யா சக்கரம் விருந்து வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு வானில் அவசர சூழலில் தன்னுடைய தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.