வாஸ்து: வீட்டில் பணம் நிரம்பி வழிய இந்த ஒரு செடியை நடுங்கள்
வீட்டை அழகாக்க சில செடிகளை நம் வீட்டிற்குள் நட்டுவைத்து வளர்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சில செடிகள் வீட்டில் நடுவதால் நல்ல பலன்கள் கொடுக்கின்றது.
அந்தவகையில், வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க பாம்பு செடி மிகவும் சிறப்பானது.
சான்செவிரியா அல்லது டிராகேனா டைபாசியாட்டா என்றும் அழைக்கப்படும் இந்த செடியின் இலைகள் அடர் பச்சை நிறத்தில் அடர்த்தியாகவும் கூர்மையாகவும் இருக்கும்.
பாம்புகளை போன்று வளைவு, நெளிவுடன் காணப்படுபதால் இது பாம்பு செடி என்று அழைக்கப்படுகிறது.
கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றும் இந்த செடி ஃபார்மால்டிஹைட் மற்றும் பென்சீன் போன்ற காற்று மாசுபாடுகளை நீக்குகிறது.
வாஸ்து படி இந்த செடியை வீட்டில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இது செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் திகழ்கிறது.
குறைந்த நீர் மற்றும் வெளிச்சத்திலும் வளரும் இந்த செடி நேர்மறை ஆற்றலை அதிகரித்து எதிர்மறை ஆற்றலைப் போக்குகிறது.
மேலும், மன அழுத்தத்தைக் குறைத்து, நிம்மதியான தூக்கத்தைத் தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |