மறந்தும் கூட இந்த பொருட்களை தலையணைக்கு அருகில் வைக்காதீங்க
பொதுவாக மனிதர்களுக்கு அவர்கள் தூங்கும்போதுதான் உடல் சற்று ஓய்வாக இருக்கும்.
அவ்வாறு தூங்கும் நேரத்தில் நம் அருகில் சில பொருட்களை வைத்திருக்கக் கூடாது. அது என்னென்ன பொருட்கள் என்று பார்க்கலாம்.
கண்ணாடி
கண்ணாடியை எப்பொழுதுமே படுக்கை அறையை பார்த்தவாறு வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக, நமது விம்பம் கண்ணாடியில் படக் கூடாது. இதுபோன்ற காரணிகள் திருமண வாழ்வில் பிரச்சினையை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பேய் கனவு போன்றவையும் வந்து பயமுறுத்தும்.
தண்ணீர் போத்தல்
தண்ணீர் போத்தலை அருகில் வைத்து தூங்கினால் மனநல பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடலாம். அதனால் தலைக்கு அருகில் தண்ணீர் போத்தலை வைத்திருக்கக் கூடாது.
அழுக்குத் துணிகள்
துவைக்காத அழுக்குத் துணிகளை ஒருபோதும் படுக்கைக்கு அருகில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கக் கூடும்.
புத்தகம்
சிலர் புத்தகங்களை வாசித்துவிட்டு அப்படியே உறங்கிவிடுவார்கள். அது மிகவும் தவறான விடயம் ஏனென்றால், இவ்வாறு புத்தகங்களை அருகில் வைத்துப் படுக்கும்பொழுது வாழ்வில் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது.