மறந்தும் கூட இந்த 4 காய்கறிகளை பச்சையாக சாப்பிடாதீங்க! உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமாம்
இன்றைய காலத்தில் பலர் டயட் என்று பச்சை காய்கறிகளை எடுத்து கொள்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
குறிப்பிட ஒரு சில காய்கறிகளை தவிர அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட கூடாது. ஏனெனில் சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அந்தவரிசையில் பச்சையாக என்ன மாதிரியான காய்கறிகளை எடுக்க கூடாது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை தொடர்ந்து பல நட்களுக்கு பச்சையாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.
பச்சை வெண்டைக்காய் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். செரிமான அமைப்பை பாதிக்கும். கடுமையான வயிற்று வலி, வாய்வு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிடுவது பல நோய்களை உண்டாக்கும். சமைக்காத உருளைக்கிழங்கில் சோலனைன் என்ற சிறப்பு வகை நச்சு உள்ளது. இது தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
பச்சையாக கத்திரிக்காயை சாப்பிடுவது வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
farmizen