நெய்மணக்கும் ஐயர் வீட்டு வெண் பொங்கல்: எப்படி செய்வது?
காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவு வெண் பொங்கல்.
அதிலும் ஐயர் வீடுகளில் செய்யப்படும் வெண் பொங்கலின் மணமும், சுவையும் தனித்துவமாக இருக்கும்.
அந்தவகையில், அருமையான சுவையில் ஐயர் வீட்டு வெண் பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- பாசி பருப்பு- ½ கப்
- நெய்- 3 ஸ்பூன்
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய்- 3
- தண்ணீர்- 5 கப்
- உப்பு- தேவையான அளவு
- முந்திரி- 12
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலில் பச்சரிசி, பாசி பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து 2 முறை கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு குக்கரில் நெய் சேர்த்து அதில் பெருங்காயம், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கழுவிய அரிசி, பருப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து இதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடிபோட்டு மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு எடுத்துகொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அதில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறினால் சுவையான ஐயர் வீட்டு வெண் பொங்கல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |