நிலைமை மிக மோசமாகிவிட்டது... நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்து கலங்கிய ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெரக்கல்
கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிட்ட அளவைத் தாண்டியவுடன் பிராந்திய தலைவர்கள் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க கட்டாயப்படுத்தும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாட்டின் நாடாளுமன்றத்தை வலியுறுத்துயுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக நான் இன்று இதை மீண்டும் சொல்ல வேண்டும், நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது, அதை நாம் அனைவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மெர்க்கல் இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தின்போது கூறியுள்ளார்.
மூன்றாவது அலை ஜேர்மனியை அதன் பிடியில் உறுதியாக கொண்டுள்ளது என்றும் சுகாதாரப் பணியாளர்கள் உதவிக்காக கூக்குரலிடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தீவிர சிகிச்சை ஊழியர்கள் ஒன்றன்பின் ஒன்றாக துன்பகரமாக அழைப்பு விடுக்கிறார்கள், அவர்களின் வேண்டுகோளை புறக்கணிக்க நாங்கள் யார்? என கேள்வி எழுப்பினார்.
ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) கட்சி ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
மசோதாவை ஆதரிப்பவர்கள் இப்போது நடவடிக்கைகள் தேவை என்று வாதிட்டனர்.
அடுத்த புதன்கிழமை இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் நேரத்தில், மேலவை ஒப்புதல் இன்னும் வரவில்லை, அது மிகவும் தாமதமாகிவிடும் என்று மசோதாவை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்.