பழம்பெரும் நடிகர் ரா.சங்கரன் 92 வயதில் மறைவு
பழம்பெரும் இயக்குநர், நடிகர் ரா.சங்கரன் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
தமிழில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு, தேன் சிந்துதே வானம், துர்கா தேவி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரா.சங்கரன்.
1931ஆம் ஆண்டில் பிறந்த இவர் புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, மௌன ராகம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவரது உறவினரான ஜாவர் சீதாராமனும் இயக்குநர், நடிகராக சில படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் ரா.சங்கரன் உடல்நலக்குறைவால் தனது 92வது வயதில் சென்னையில் இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா எக்ஸ் பக்கத்தில் ரா.சங்கரன் மறைவுக்கு இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |