நாவூறும் சுவையில் வெற்றிலை சாதம்.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வெற்றிலை சாதத்தை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் வெற்றிலை சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெற்றிலை- 5
- உளுந்து- 1 ஸ்பூன்
- வேர்க்கடலை- 1 ஸ்பூன்
- எள்ளு- 1 ஸ்பூன்
- பாசிப்பருப்பு- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- பூண்டு- 2 ஸ்பூன்
- காய்ந்தமிளகாய்- 3
- உப்பு- தேவையான அளவு
- சத்தம்- 1 கப்
- நெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் உளுந்து, வேர்க்கடலை, எள்ளு, பாசிப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெற்றிலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கடலை பருப்பு, சீரகம், நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, நறுக்கிய வெற்றிலை சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து இதில் வடித்த சாதம், உப்பு மற்றும் அரைத்த பொடி சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.
இறுதியாக இதில் நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெற்றிலை சாதம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |