முல்லை பெரியாறு விடயத்தில் தமிழக அரசு கேரளாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கலாம்! வெற்றிச்செல்வன் பேட்டியின் முழு வீடியோ
முல்லை பெரியாறு விடயத்தில் கேரளாவின் செயலுக்கு தமிழக அரசு சரியான எதிர்வினையை ஆற்றியிருக்கலாம் என பூவுலகின் நண்பர்களை சேர்ந்த வெற்றிச்செல்வன் கூறியுள்ளார்.
சுற்றுசூழல் தொடர்பான பிரச்சினைகள், தமிழக உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கமாக பூவுலகின் நண்பர்கள் உள்ளது.
இந்த இயக்கத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் அளித்துள்ள பேட்டியில், முல்லை பெரியாறில் இருந்து கேரள அரசு தண்ணீர் திறந்துவிட்டதற்கு தமிழக அரசு சரியான எதிர்வினையை ஆற்றவில்லை என்றே நினைக்கிறேன்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போதும் அவர்கள் இப்படி நடந்து கொண்டனர், அதற்கு தமிழக அரசு கண்டனங்களை தெரிவித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
வெற்றிச்செல்வன் பேட்டியின் முழு வீடியோவை கீழே காணலாம்,