பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளிக்குள் நுழைய முயன்ற பெற்றோரின் தவிப்பைக் காட்டும் வீடியோ
அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டபோது, பொலிசார் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாமே பள்ளிக்குள் நுழைவோம் என பெற்றோர் பதறித் துடிக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தகவல் அறிந்த பெற்றோர் சம்பவ இடத்தில் கூடிய நிலையில், பொலிசார் பள்ளிக்குள் செல்லாமல் வெளியேயே நின்றதாக பொலிசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளியைச் சுற்றிலும் ஆயுதங்களுடன் பொலிசார் நின்றுகொண்டிருக்க, இங்கே என்ன செய்கிறீர்கள், உள்ளே போங்கள் என ஒருவர் பொலிசாரை நோக்கி சத்தமிடுவதை வெளியாகியுள்ள வீடியோவில் கேட்க முடிகிறது.
*BREAKING* Robb Elementary School shooting. Uvalde Texas. This video shows the chaos outside of the school where parents were trying to find their children.#Uvalde #RobbElementary #SchoolShooting pic.twitter.com/yx97i6Bh9w
— TheFamily'sSoup TV (@FamilysSoupTV) May 25, 2022
பிள்ளைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை அறிந்து பதறிப்போய் சத்தமிட்ட ஒரு பெண்ணை பொலிசார் தரையில் தள்ளி பிடித்து வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கு உள்ளே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்க, பொலிசார் வெளியே நின்றுகொண்டிருக்க, பிறகுதான் தெரியவந்துள்ளது, கதவை உடைத்து பொலிசாரால் உள்ளே நுழைய முடியவில்லையாம்.
பள்ளியில் துப்பாக்கிச்சூடு என அவசர உதவி கோரி அழைக்கும் முதல் அழைப்பு காலை மணி 11.32க்கு வந்த நிலையில், கட்டிடத்தின் சாவியை வாங்கி தாக்குதல்தாரியை பொலிசார் சுட்டுக்கொல்லும்போது நேரம் மதியம் 1.00 மணி!
பொலிசார் கட்டிடத்துக்குள் செல்லாமல் வெளியேயே நின்றதால் பதறிய பிள்ளைகளின் பெற்றோர், பொலிசார் எதுவும் செய்யாமல் நிற்கிறார்கள், நாம் உள்ளே போவோம் என்று கூறியபடி உள்ளே நுழைய முயன்றிருக்கிறார்கள்.
பலரைக் காப்பாற்றியிருக்கலாம், ஆனால், பொலிசார் தயாராக இல்லை என்கிறார் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோரில் ஒருவர்.
40 பொலிசார் துப்பாக்கிகளுடன் அங்கே நின்றார்கள், ஆனால் ஒரு மண்ணும் அவர்கள் செய்யவில்லை என கொந்தளிக்கிறார் அவர்.
பள்ளிக்கு உள்ளே போங்கள், ஏதாவது செய்யுங்கள் என தாங்கள் கதறியும் பொலிசார் உடனடியாக எதுவுமே செயயவில்லை என்கிறார்கள் பெற்றோர்!