உ.பி-யில் பயங்கரம்! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மோதி ஏறிச் சென்ற மத்திய அமைச்சரின் கார்கள்! வெளியானது திகிலூட்டும் வீடியோ
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பாஜக மத்திய அமைச்சருக்கு சொந்தமான வாகனங்கள் மோதி ஏறிச் சென்ற சம்பவத்தின் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் Lakhimpur Kheri மாவட்டத்தில் உள்ள விவாசயிகள், கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஞாயிற்றிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மத்திய அமைச்சரின் அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட்டத்தில் மோதி ஏறிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து Lakhimpur Kheri மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் கொல்லப்படட்னர், இதில் அமைச்சர் வாகனம் மோதி உயிரிழந்த 4 விவசாயிகளும் அடங்குவர்.
இச்சம்பவத்திற்கு பின் பேட்டியளித்த அஜய் மிஸ்ரா, வாகனம் மீது போராட்டகாரர்கள் கற்களை வீசினர், அதனால், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாயிகள் மீது மோதியது, இதில் கார் ஓட்டுநர் இறந்துவிட்டதாக கூறினார்.
மேலும், சம்பவத்தின் போது தனது மகன் சம்பவயிடத்தில் இல்லை, விவசாயிகள் மோதி கார்கள் அவருடையதில்லை என மிஸ்ரா கூறினார்.
TW: Extremely disturbing visuals from #LakhimpurKheri
— Congress (@INCIndia) October 4, 2021
The silence from the Modi govt makes them complicit. pic.twitter.com/IpbKUDm8hJ
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னால் இருந்து அமைச்சர் கார்கள் மோதி ஏறிச் செனற் வீடியோக்களை காங்கிரஸ் கட்சி அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
எனினும், காவல்துறை இந்த வீடியோவை உறுதி செய்யவில்லை. இந்த வீடியோ உண்மையானது என நிரூபணமானால், அமைச்சர் கூறியது அனைத்தும் பொய் என்பது உறுதியாகிவிடும்.
இச்சம்பவம் தொடர்பில் அஜஸ் மிஸ்ரா, அவரது மகன் உட்பட பலர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனினும், அஜய் மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படவில்லை.
அமைச்சரும் அவரது மகனும் கைது செய்யப்படும் வரை, கொல்லப்பட்டவர்களின் உடலை அடக்க செய்ய மாட்டோம் என விவசாயிகள் சடலங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.