இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு: எத்தனை மில்லியன் மக்கள் நேரலையாக பார்த்தார்கள் தெரியுமா?
காலமான பிரித்தானிய இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கை சுமார் 14 மில்லியன் பிரித்தானிய மக்கள் நேரலையாக பார்வையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த எண்ணிக்கையானது தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடனான இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் நேர்காணலை விட 1 மில்லியன் அதிகமாகும்.
கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளவரசர் பிலிப் இறுதிச்சடங்குகள் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் நேரலை செய்யப்பட்டது.
முக்கிய தனியார் தொலைக்காட்சிகள் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதுடன் நேரலையும் செய்துள்ளது.
ITV நிறுவனத்தின் நேரலை நிகழ்வுகளை சுமார் 2.1 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். அதேவேளை, Sky தொலைக்காட்சியின் ஒரு மணி நேர நேரலையை 450,000 பேர்கள் பார்வையிட்டுள்ளனர்.
ஆனால் Beeb's live ஊடகத்தில் மட்டும் 11 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். ஒரு சில முக்கிய ஊடகங்கள் இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நேரலை செய்யவில்லை என்பது மட்டுமல்ல, திரைப்படம் மற்றும் வழக்கமான நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.