தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி! முக்கிய தகவல்
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி வழங்கப்படுவதாக அதன் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் திகதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் போட்டியிடலாம் என விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் தேர்தலில் விஜய்யின் படம், மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்களே முடிவு செய்வார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
முன்னதாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.