இந்திய அணியில் இடம் பிடிக்க தமிழன் விஜய் சங்கர் எடுத்துள்ள திடீர் முடிவு! அதிர்ச்சியில் தமிழ்நாட்டு ரசிகர்கள்
தமிழக வீரரான விஜய் சங்கர் இந்த்ய அணியில் இடம் பிடிப்பது குறித்து எடுத்துள்ள முடிவு, தமிழ்நாட்டு ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி இப்போது சரியான ஆல் ரவுண்டரை தேடி வருகிறது. ஏனெனில் அதிரடி மன்னன் ஹார்திக் பாண்ட்யா தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வருவதால், அவரால் முன்பு போல் பந்து வீச முடியவில்லை.
இதனால் ஹார்திக்கை ஓரு பேட்ஸ்மேனாக இந்திய அணி எடுக்க விரும்பவில்லை. அதன் காரணமாக ஷாகூல் தாகூர் போன்றோரை ஆல் ரவுண்டர் ஆக்க முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் இடம் பிடித்த தமிழக வீரர் விஜய் சங்கர், அதன் பின் மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்போது வரை அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து விஜய் சங்கர்,உள்ளூர் போட்டிகளில் தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் இவர், இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக, உள்ளூர் போட்டிகளில் வேறு மாநில அணிக்காக விளையாடப்போகும் முடிவையும் தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
நான் தமிழ்நாடு அணியிலிருந்து வெளியேறி மற்ற மாநில அணியில் விளையாடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். மற்ற மாநில அணிகளில் எனக்கு 3 அல்லது 4வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும்.
ஆனால் தமிழ்நாடு அணியில் எனக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுக்கின்றனர். என்னுடைய இந்த முடிவைக்கண்டு தமிழ்நாடு அணி, என்னை 3 அல்லது 4வது இடத்தில் களமிருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
இவரின் இந்த முடிவு தமிழக ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.