எனக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா செமையா விளையாடுவேன்! தமிழக வீரர் விஜய் சங்கர் வருத்தம்
இந்திய அணி வீரரான விஜய் சங்கர் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடர் மூலம் சிறந்த வீரராக அடையாளம் காணப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால், அவர் அந்த தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தினால், அணியில் இருந்து ஓரங்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தாண்டு ஐபிஎல்லிலும் விஜய் சங்கர் அந்தளவிற்கு விளையாடவில்லை.
இது போன்ற நிலையில், அவர் தான் தமிழக அணியில் இருந்து விலகி, வேறொரு அணிக்கு விளையாடப் போவதாகவும், அப்போது தான் என் திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இது குறித்து பிரபல தனியார் ஊடகம் கேட்ட போது, இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகக் கடினமாக இருக்கிறது. நான், ஆம் என்று சொல்வதா இல்லையென்று சொல்வதா என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் அந்த முடிவில் இதற்கு முன்பு நான் இருந்தது உண்மைதான். உலக கோப்பை தொடரில், இந்திய அணியில் அம்பத்தி ராயுடு தேர்வாகாமல் போனதிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என்னை 3D ப்ளேயர் என்று இந்திய தேர்வுக் குழு கூறியதால், அம்பத்தி ராயுடு அது சம்பந்தமாக ஒரு டுவீட்டை அப்போது பதிவு செய்தார். அந்த டுவீட்டில் கருத்து தெரிவித்த ரசிகர்கள் அனைவரும் என்னை டேக் செய்ததால், தொடர்ச்சியாக நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
மேலும், எனக்கு இந்திய அணியில் ஒரு நிரந்தரமான பேட்டிங் வரிசை கிடைக்கவில்லை. நான் எப்போது களமிறங்கப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. அதெல்லாம், நான் விளையாடிய போட்டிகள் எந்த வகையில் செல்கிறது என்பதைப் பொறுத்தே அமைந்தது.
இப்படி ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால்தான் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது என்று கூறிய விஜய் சங்கர், தன்னை உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய தென் ஆப்ரிக்காவின் ஜாக்கியூஸ் கலீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுடன் ஒப்பிட்டுக் கொண்டார்.
இவர்கள் தங்களுடைய நாட்டிற்காக விளையாடும்போது, மூன்று அல்லது நான்காவது இடங்களில் தொடர்ச்சியாக களமிறங்கினர். இதன் காரணமாகவே அவர்களால் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக மாற முடிந்தது.
ஆனால் எனக்கோ அப்படி ஒரு நிலமை வாய்க்கவில்லை.
ஆறாவது அல்லது ஏழாவது இடங்களில் நான் இறக்கி விடப்பட்டேன். சில போட்டிகளில் டாப் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பும் எனக்கு வழங்கப்பட்டது. அந்த போட்டிகள் எல்லாவற்றிலும் நான் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.