மறைந்த வசந்த் & கோ நிறுவனர் வசந்தகுமார் ஜெயித்த இடத்தில் இருந்து போட்டியிட்ட அவர் மகன் நடிகர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை!
தமிழகத்தின் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் சார்பில் கடந்த 2019 மக்களைவை தேர்தலில் கன்னியாகுமரியில் நின்று வெற்றி பெற்று எம்.பி ஆனார் வசந்த & கோ நிறுவனரான தொழிலதிபர் வசந்தகுமார்.
இந்த நிலையில் கடந்தாண்டு உடல்நலக்குறைவால் வசந்தகுமார் உயிரிழந்தார். இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலுடன் இணைந்து கன்னியாகுமரி மக்களவைக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகனான நடிகர் விஜய் வசந்த் போட்டியிட்டார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் களம் கண்டார்.
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் 13285 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.