மறைந்த வசந்த் & கோ வந்தகுமாரின் மகன் விஜய் அபார வெற்றி! மக்களுக்கு உருக்கமுடன் அவர் சொன்ன வார்த்தைகள்
தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதி தேர்தலில் நடிகர் விஜய் வசந்த் ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
கடந்த 6-ஆம் திகதி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று இன்னும் 10 இடங்களில் முன்னிலை வகித்து, தமிழகத்தில் ஆட்சியமைக்கிறது.
அதிமுக 64 இடங்களில் வெற்றி பெற்று 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியுடன் ஜோடி சேர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மறைந்த வசந்த் & கோ வந்தகுமாரின் மகன் விஜய் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/Xd8w6onvoC
— VijayVasanth (@iamvijayvasanth) May 2, 2021
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை விட ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து நடிகர் விஜய் வசந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்