அந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்! தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கடலூரில் ஆற்றில் மூழ்கி ஏழு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து அதிரிச்சியடைந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்த ஏழு சிறுமிகள், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிறுமிகள் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனையடைந்ததாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
'கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அதேபோல் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே, காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் கதவை திறக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களில் பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிப்போரை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர்களும் பிள்ளைகளை கண்காணித்து நீர்நிலை பகுதிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்' என தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளம் பெண்கள், 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
— Vijayakant (@iVijayakant) June 6, 2022
(1-2) pic.twitter.com/Aim8pvPsyD