முதல்வர் ஆன பின்பும் பழசை மறக்காத ஸ்டாலின்! கண்ணீர் விட்டு அழுத விஜயகாந்த்: நெகிழ்ச்சி தகவல்
தமிழகத்தின் முதல்வர் ஆன பின்பும், ஸ்டாலின் பழசை மறக்காமல் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் அக்கறையுடன் பேசியுள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
கடந்த 7-ஆம் திகதி முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, ஸ்டாலின், விஜயகாந்த் உடல்நிலை, பிரேமலதா பற்றி ஸ்டாலின் அக்கறையுடன் விசாரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மோசமாக இருக்கிறது.
எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அப்பா விஜயகாந்திடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கிய ஸ்டாலின், கருணாநிதி - விஜயகாந்த் இடையிலான நட்பை பற்றி கூறியுள்ளார்.
அதன் பின் வீடு திரும்பிய விஜயபிரபாகரன், அப்பா விஜயகாந்த்திடம், ஸ்டாலின் தன்னைப் பற்றி கனிவாக விசாரித்ததையும், கருணாநிதி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்ட, விஜயகாந்த் ஒரு நிமிடம் கண்கலங்கியுள்ளார். அதன் பின்னர் குடும்பத்தினர் சமதானப்படுத்தியுள்ளனர்.