தூசி தட்டப்பட்ட நடிகை விஜயலட்சுமி வழக்கு! கைதான ஹரி நாடார்... சீமானுக்கு சிக்கலா?
நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஹரி நாடார் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பில் சீமானிடம் விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஹரி நாடார் என்பவர் அதிகளவு நகைகளை அணிந்த வலம் வரும் மனிதராக இருக்கிறார், அதன் மூலமே தமிழகத்தில் பிரபலமானார். வட்டித் தொழில் செய்டுவந்த ஹரி நாடார் பின்னர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
இதோடு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். இந்த நிலையில் சீமான் மீது குற்றம்சாட்டி வந்த நடிகை விஜயலட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இது தொடர்பாக பொலிசில் அளித்த புகாரில், உடல் நிலை சரியில்லாத நிலையிலும், சிலரின் தூண்டுதலின் பேரில் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்.
சீமானுக்காக என்னை ஹரி நாடார் மிரட்டுகிறார். அதனால் சீமான், ஹரி நாடார், சதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது இவ்வழக்கை தமிழக பொலிசார் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
இதையடுத்து ஹரி நாடார் மீது தற்கொலைக்குத் தூண்டியது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்தனர்.
ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சீமான் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அதே போல ஹரி நாடாரை நீதிமன்ற காவலில் எடுத்து பொலிசார் விசாரித்த பின்னர் சீமானிடமும் விஜயலட்சுமி புகார் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.