வெளிநாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் எப்படியிருக்கிறார்? அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம்
வெளிநாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற விஜயகாந்த் தான் நலமுடன் இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகரும், தே.மு.தி.க. நிறுவனருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த 30-ந் திகதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த் வீல் சேரில் அழைத்து வரப்பட்ட வீடியோ வெளியாகி ரசிர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. கம்பீரமாக வலம் வந்த விஜயகாந்த் இப்படி ஆகிவிட்டாரே என வேதனை தெரிவித்தனர்.
இந்த நிலையில் துபாய் மருத்துவமனையில் இருந்து தனது புகைப்படத்தை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் சோபாவில் உட்கார்ந்தபடி செல்போனில் அவர் படம் பார்க்கிறார், அவரை சுற்றி 4 பெண் செவிலியர்கள் உள்ளனர்.
அந்த பதிவில், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் தெம்பாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Am doing well. Watching 'Satriyan' movie, with Sisters who taking care of me.
— Vijayakant (@iVijayakant) September 5, 2021
நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த
'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம். pic.twitter.com/QekthdQNz2