சாலையில் குடும்பமாக சுற்றித் திரிந்த சிங்கங்கள்! பீதியில் மக்கள்
குஜராத்தில் பிரதான சாலையில் 5 சிங்கங்கள் குடும்பமாக உலா வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப நாட்களாக, மக்கள் குடியிருக்கும் நகரப் பகுதிகளை சுற்றி காட்டு விலங்குகள் உலா வரும் ஏராளமான வைரல் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற ஒரு சமீபத்திய வீடியோவில், குஜராத்தின் அம்ரேலியில் ஒரு பிரதான சாலையில் ஒரு சிங்கம் நடந்து செல்வதை காண முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இரண்டு குட்டிகள் உட்பட 5 சிங்கங்களின் குடும்பம் பிபாவவ் சாலையில் நடந்து சென்று துறைமுகத்தை அடைந்தது. அந்த வீடியோவை Old Bombay என்ற பக்கம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
This is not #Africa it's #India a pride of lions walking at Pipavav port. #Rajulacity #Gujarat #saurastra #asiaticlion #gir #girlion #IncredibleIndia #Mumbai #goodmorning pic.twitter.com/GQ8Ic8bwBY
— Old Bombay (@oldmumbai) July 6, 2021
இந்த சிங்கங்கள் சாதாரணமாக தெருக்களில் நடப்பதைக் கண்டபின், துறைமுகத்தில் இருந்த பல உள்ளூர்வாசிகளும் தொழிலாளர்களும் பீதியடைந்தனர். உடனே பாதுகாப்பு ஊழியர்கள் இந்த சம்பவத்தை வன அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கிர் காடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து சிங்கங்கள் உணவு தேடி வந்த நிலையில் நகரத்தை நோக்கி வழிதவறி, மனித ஆதிக்கம் நிறைந்த பகுதிக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியா.காமில் ஒரு அறிக்கையின்படி, 2020 ஜூன் மாதம், ஆசிய சிங்கங்களின் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் 29% அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு சிங்கம் கணக்கெடுப்பில், கிர் தேசிய பூங்காவில் 674 சிங்கங்கள் இருப்பது தெரியவந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு சிங்கங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது.