அசுர வேகத்தில் ஆட்டோ மீது மோதிய ஆடி கார்! பதறவைக்கும் வீடியோ காட்சியை வெளியிட்ட பொலிஸார்
தெலுங்கானாவில் மின்னல் வேகத்தில் தாறுமாறாக வந்த ஆடி கார் ஒன்று ஆட்டோ ஒன்றின் மீது மோதிச் சென்றதில், ஆட்டோ பம்பரம் போல் சுழன்று விபத்துக்கு உள்ளான காட்சி ஒன்று வைரலாகிவருகிறது.
இந்திய மாநிலம் தெலுங்கானாவில், மாதாபூர் பகுதியில் உள்ள இனோர்பிட் மால் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குறித்த சம்பவம் நடந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ ரிக்ஷாவுக்குள் இருந்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்த இந்த விபத்தின் பயங்கரமான காட்சிகளை, விழுப்புணர்வுக்காக சைபராபாத் போக்குவரத்து காவல்துறையினர், அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த விடியோ 40,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
Reckless speed and drunk driving of an Audi car kills a passenger (an employee of Prism Pub !! ) in the auto yesterday early morning near Inorbit Mall.
— CYBERABAD TRAFFIC POLICE సైబరాబాద్ ట్రాఫిక్ పోలీస్ (@CYBTRAFFIC) June 29, 2021
A case of culpable homicide not amounting to murder has been booked against the Audi driver and his associates.#RoadSafety pic.twitter.com/vhJfsiL9cS
ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நபர், ஹைதராபாத்தில் Prism Pub-ல் வேலை பார்க்கும் உமேஷ் குமார் என தெரியவந்தது.
விபத்து நடக்கும்போது அந்த ஆடி காரில்வந்த 24 வயதுடைய சுஜித் ரெட்டி மற்றும் ஆஷிஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த காரின் உரிமையாளரான சுஜித் ரெட்டியின் தந்தை ரகுநந்தன் ரெட்டியையும் கைது செய்துள்ளனர்.
அதனை அடுத்து, ரகுநந்தன் வீட்டு டிரைவர் பிரபாகர் (55) இந்த விபத்தை செய்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ஆனால், சுஜித் குமாரை விசாரித்த பிறகு ஆஷிஷ் தான் குடிபோதையில் வாகனத்தை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
மேலும், சிசிடிவி காட்சியில் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருப்பது இளம் ஆண் என்பது நன்றாக தெரிகிறது, அதுமட்டுமின்றி டிரைவர் பிரபாகர் கூறிய கதை சம்பவத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதால், ஆஷிஷ் தான் குற்றவாளி என்பது உறுதிசெய்யப்பட்டது.