அனுஷ்காவை காண இலங்கைக்கு பறந்து வந்த கோலி! சுவாரசியமான காதல் கதை
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் விராட் கோலி - அனுஷ்கா சர்மா.
இவர்கள் ’வீருஷா’ என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகின்றனர். விராட் கோலி உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஆவார், அனுஷ்கா சர்மா பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கிறார்.
இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களின் காதல் கதை சுவாரசியமானது. ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் தான் இவர்கள் இருவரும் முதன் முதலாக சந்தித்து கொண்டனர்.
இவர்களுக்கு நட்பு மலர்ந்து நிறைய இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து செல்ல ஆரம்பித்தனர். உடனே கிசுகிசுவும் பரவ தொடங்கியது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்து நாடு திரும்பிய போது, அணியினரோடு ஹொட்டலுக்கு செல்ல வேண்டிய விராட் கோலி.
நேரடியாக அனுஷ்கா ஷர்மா வீட்டுக்கு சென்றிருந்தார். அனுஷ்கா விராத் கோலியை பிக்கப் செய்ய கார் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமயத்தில் தங்கள் உறவு குறித்து இருவருமே வாய் திறந்து பேசவில்லை.
ஆயினும் அவர்களுக்குள் காதல் வேரூன்றி பரவி இருந்தது. நியூசிலாந்து உடனான தொடரின் போது பிப்ரவரி 2014, நியூசிலாந்து வீதிகளில் இவர்கள் கைகோர்த்து வீதி உலா சென்று கொண்டிருந்தனர்.
விராட் கோலி அனுஷ்காவிற்கு சர்ப்ரைஸ் தர ஒருபோதும் தவறியது இல்லை. அனுஷ்கா பாம்பே வெல்வெட் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கையில் இருந்த போது, இவர் நேராக அங்கு சென்று அவரை கண்டு வந்தார்.
நவம்பர் 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் போது விராத் பறக்கவிட்ட முத்தங்கள் இவர்கள் இருவரும் நேசிப்பதை ஊர்ஜிதம் செய்தது. வாக் (Vogue) அழகி விருதுகள் 2015ல் நடந்த இருவரும் ஜோடியாக பங்கெடுத்து கொண்டனர்.
இதன் இடையே தான் நிறைய பத்திரிகையாளர்களின் கேள்விகளால், இவர்கள இருவரும் பல சர்ச்சைகளை சந்தித்தனர். சில புரிதல் இன்மையின் காரணத்தால் இவர்கள் இருவரும் சந்தித்து கொள்வதை நிறுத்தி கொண்டனர் சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதையும் நிறுத்தினர்.
சிறிது காலம் கழித்து, இந்த ஜோடி யுவராஜின் திருமண விழாவில் ஒன்றாக பங்கெடுத்து கொண்டனர். இம்முறை இவர்கள் மிக வலிமையான ஜோடியாக காணப்பட்டனர்.
பிரிவு தான் காதலை அதிகரிக்கும் என்பதற்கு உதாரணமாய் அமைந்தது இந்த நிகழ்வு. 4 ஆண்டுகள் காதலுக்கு பிறகு இந்த ஜோடி இத்தாலியில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து வெளி உலகிற்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வமிகா என பெயர் வைத்துள்ளனர்.